Friday, March 26, 2010

காதலா காதலியா கடவுளா

காதல்தான் காதலியை விட மிக அழகு.
அதனாலதான் காதலோடு தொடர்புடைய எல்லாமே மிக அழகாக தெரிகிறது.
காதலி சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, காதலை மட்டும் மனதை விட்டு பிரிக்காதீர்கள்.
வாழ்க்கை என்றும் அழகாக தெரிய காதலே காதலியை விட முக்கியம்.
காதல் மட்டும் இருந்தால் காதலி மட்டுமல்ல கடவுளும் தேடி வருவான்.

நண்பனின் காதல் பற்றி..

எனக்கு தமிழ் மட்டுமே நன்றாக
தெரியுமென்பதால் மட்டுமல்ல,
உனக்கு தமிழ் தெரிந்திருந்தால்
என் கவிதையை எவ்வளவு ரசிப்பாய் என்ற
என் நினைப்புமே
என் கவிதையை மேலும் அழகாக்குகின்றன.

என்றாவது ஒரு நாள்,
உன்னை நினைத்துதான் நான் இந்த கவிதையை எழுதினேன் என்று
அறியாமல் போய் விடுவாயா என்ன?